கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவது மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை என இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதல்வர் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மாலை நடைபெறவிருந்த கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.