அரியலூரில் புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் 4-வது மாடியில் வேலை பார்த்து வடமாநில தொழிலாளி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 570 வடமாநில தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 670 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 4-வது மாடியில் இரும்புப் பலகையை பிரித்துக் கொண்டிருந்த மேற்குவங்கா தொழிலாளி மிந்து மண்டல் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.