தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு நாளைக்கு முன்பே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.