தமிழ்நாடு

வெட்டு இல்லை; மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம்: முதலமைச்சர் பழனிசாமி

Rasus

தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை மின் பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்பழுது வேண்டுமானால் ஏற்பட்டிருக்கலாம். தேவையான மின்உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எங்கேயாவது மின்பழுது ஏற்படும் போது அதனை உடடினயாக சரிசெய்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

நான் பதவியேற்று 70 நாட்கள் ஆகிறது. இந்த நாளில் 1560 கோப்புகளுக்கு கையெழுத்திட்டிருக்கிறேன். ஆனால் ஒரு கோப்பு கூட நிலுவையில் இல்லை. அரசு இயந்திரம் வேகமாக துரிதமாக செயல்பட்டிருக்கிறது. தேங்கியிருந்த கோப்புகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன. வாக்குறுதிப்படி படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என பழனிசாமி தெரிவித்தார்.