தமிழ்நாடு

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: கருணாஸ்

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: கருணாஸ்

Rasus

முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் கருணாஸ்.

கடந்த சில நாட்களுக்கு முன், முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தார் கருணாஸ். இந்நிலையில் கருணாசையே கட்சியை விட்டு நீக்கியதாக அதன் பொதுச் செயலாளர் பாண்டித்துரை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் கருணாஸ், கட்சியில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனக் கூறியுள்ளார். மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்ட பிறகு அவர்கள் எவ்வாறு என்னை நீக்க முடியும்? என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.