தமிழ்நாடு

யாரையும் அடைத்து வைக்கவில்லை... சசிகலா

Rasus

சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை எனவும், அவர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாளாக கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தினர். பின்னர் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை எனவும், அவர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிரி கட்சியினர் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றஞ்சாட்டிய சசிகலா, அரசுக்கு எந்தவித பங்கமும் வரக்கூடாது என்பதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.