தமிழ்நாடு

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

கலிலுல்லா

தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ''வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளதே தவிர, ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. ஒமைக்ரான் தொற்று என்பது பதற்றமடையக்கூடிய உருமாற்றம் அல்ல. கடந்த 2 நாட்களில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பிய 2,500 பேரை சோதனை செய்துள்ளோம்.

மக்கள் மாஸ்கை தவறாமல் அணிந்து, கூட்டத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 7.4 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.