தமிழ்நாடு

பொறியியல் பட்டதாரிகள் 40% பேருக்கு வேலை கிடைக்கவில்லை: அமைச்சர் வேதனை

webteam

பொறியியல் பட்டதாரிகள் 40 சதவிகிதம் பேர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜ‌‌ன் கவலை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில்‌ இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் அவர் இதனை தெரிவித்தார். அதே ச‌மயம் பொறியியல் துறையி‌ல் புகுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டதாரிகளுக்கு புதிய வேலைகள் உருவாக வாய்ப்புகள் அதிக‌ரித்து வருவதாகவும் அமைச்‌சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அடித்தட்டு மக்களை பாதிக்கும் சர்க்கரை விலையேற்றத்தை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என‌ வலியுறுத்தினார்.