தமிழ்நாடு

சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்!

jagadeesh

நிவர் புயல் சின்னம் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், எந்த நேரம் வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.