முழு அடைப்பு போராட்டம் pt desk
தமிழ்நாடு

நீலகிரி | இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு... முழு அடைப்பு போராட்டம் - சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரியில் வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள், சுற்றுலா வந்தவர்களுக்கு உணவு கிடைக்காமல் அவதியடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஜான்சன்

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 24 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து கடைகள், உணவகங்கள், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள் இன்று இயங்காததால் நகர் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரஇறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 24மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பிற்கு விடுக்கப்ட்டிருந்தது,

இதன் தொடர்ச்சியாக இன்று காலை உதகை, குன்னூர், காதே;தகிரி, கூடலூர் பானே;றப் பகுதிகளில் கடைகள், வர்தக நிறுவனங்கள், சுற்றுலா வாகனங்கள், உள்ளிட்டவை இயங்காததால் நகர் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.