தமிழ்நாடு

தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு பொதுமுடக்கம்!

தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு பொதுமுடக்கம்!

sharpana

கொரோனா பரவலின் இரண்டாவது அலை கரணமாக, தமிழகத்தில் அரசு அறிவித்த இரவு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 6 வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இன்று மட்டுமே ஒரேநாளில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்தவாரம் தமிழக அரசு இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று 10 மணிக்கு இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.