தமிழ்நாடு

நெல்லை அருகே என்ஐஏ அதிகாரிகள் சோதனை

webteam

திருநெல்வேலி அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி, தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, ராமநாதபுரம், மதுரை. மண்ணடி, மேலப்பாளையம் உள்பட பல பகுதிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், சிலருக்கு சம்மன் அனுப்பியும் விசாரித்தனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளியை சேர்ந்த திவான் முஜிபுர் வீட்டில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திவான் முஜிபுர், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாட்டில் வேலை பார்த்துள்ளார். அவர் பற்றி கிடைத்த சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது. காலை 7 மணி முதல் சோதனை நடை பெற்று வருகிறது.