நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிபெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். குறிப்பாக கொலை நடத்து 5 நாட்கள் ஆன நிலையில் 5 நாட்களும் கிடைக்கப்பெற்ற பல்வேறு தகவல்களை சேகரித்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்று சந்தேகப்படும் நபர் கைதாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.