தமிழ்நாடு

நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்துவோம்: போராட்டக்குழுவினர்

webteam

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் உறுதியை ஏற்றுதான் நெடுவாசல் போராட்டத்தை கைவிட்டதாகவும். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கினால் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் நெடுவாசல் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற இருக்கும், ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்தோடு, டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அரசு கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.