தமிழ்நாடு

நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு.. மாணவர்கள், இளைஞர்கள் போராட கோரிக்கை

webteam

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதார‌ம் பெரிதும் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சமூக வலைதளங்களின் உதவியினால் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த புரிதல் ஏற்பட்டது என்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டது போல் நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.