தமிழ்நாடு

நெடுவாசலில் 13ஆவது நாளாக தொடரும் போராட்டம்

webteam

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி 13ஆவது நாளாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். நெடுவாசல் போராட்டங்களில் மையப்புள்ளியாக தீவிரமெடுத்துவருகிறது. இருவாரங்களாக போராட்டக்களத்தில் தீவிரம் காட்டிவரும் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். மண்ணெண்ணெய் எடுக்கவென்று அனுமதித்த திட்டம் இப்போது தங்கள் வாழ்வாதாரத்தையே அசைத்துப்பார்ப்பதாக வேதனையுடன் கூறுகிறார்கள் இப்பகுதி விவசாயிகள். விவசாயத்தை காக்க போர்க்குரல் உயர்த்தியுள்ள மக்கள், போராட்டத்திற்காக ஆதரவையும் திரட்டிவருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் மக்கள் முடிவு செய்துள்ளனர். நெடுவாசலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை திருப்பி அளிக்கும் போராட்டம்,வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.