தமிழ்நாடு

‘சமூகநீதியில் முதன்மையான தலைவர் எம்.ஜி.ஆர்.’ - பிரதமர் மோடி புகழாரம்

JustinDurai

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105- வது பிறந்த நாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசுத் தரப்பிலும் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது'' என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.