தமிழ்நாடு

பீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..!

jagadeesh

பீகாரிலிருந்து போதை சாக்லேட் உள்ளிட்டவற்றை கடத்தி வந்த வட மாநில இளைஞர்கள் 3 பேர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், 11-வது நடைமேடையில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனர். அவர்களது உடைமைகளை சோதித்தபோது, கஞ்சா, போதை சாக்லேட் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்கள் 3 பேரும் பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறையினரின் விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சன்வாஸ் வர்சாடி, மகுன்குமார், பாபுகுமார் என தெரியவந்தது. பீகாரில் இருந்து கஞ்சா, போதை சாக்லேட்டுகள், குட்கா உள்ளிட்டவற்றை வாங்கி வந்து சவுகார்பேட்டை பகுதியில் விற்பனை செய்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர், 200 கிராம் கஞ்சா, 1 கிலோ ஜர்தா புகையிலை மற்றும் 200 போதை சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.