தமிழ்நாடு

"டெல்லி டெல்லி டெல்லி டெல்லி": கொந்தளித்த நாஞ்சில் சம்பத்

webteam

டிடிவி தினகரன் கைதுக்கு “டெல்லி டெல்லி டெல்லி டெல்லி” தான் காரணம் என நாஞ்சில் சம்பத் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரனை ஜாமீனில் எடுக்க தேவையில்லை என்றார். டிடிவி தினகரன் கைது பின்னணியில் யார் இருப்பதாக நினைக்கிறீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு “டெல்லி டெல்லி டெல்லி டெல்லி” என்று அவர் பதிலளித்தார். டிடிவி தினகரன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாககூறிய அவர் டெல்லி போலீசாரின் விசாரணைக்கு குறுக்கீடு செய்ய மாட்டோம் என்றார். ஏற்கனவே டிடிவி தினகரனிடம் 37 மணி நேரம் விசாரணை நடைபெற்று விட்டது. இனிமேல் விசாரிக்க என்ன வேண்டியிருக்கிறது. இது ஒரு நாடகம் என்றும் அவர் கூறினார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பேனர் அகற்றப்பட்டது சரித்திர அநீதி என குறிப்பிட்ட அவர், இயக்கத்தின் சுமையை தோளில் சுமந்தவர் சசிகலா எனவும் தெரிவித்தார். கட்சியில் பொதுச் செயலாளர் கண் அசைவும்,கையெழுத்தும் இல்லாமல் யாராலும் எதையும் செய்ய முடியாது என்றும் கூறினார்.