பன்னீர்செல்வத்திற்கு திராவிட இயக்கம் பற்றி எதுவும் தெரியாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் திராவிட இயக்கம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், பன்னீர்செல்வத்திற்கு திராவிடம் பற்றி எதுவும் தெரியாது என கூறினார். மேலும் பேசிய அவர், தினகரனும் சசிகலாவும் திராவிட கொள்கைகள் கொண்டவர்கள் என்றார். சசிகலாவின் கன்னி பேச்சே அவரது திராவிடம் குறித்த பார்வைக்கு சான்று என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.