தமிழ்நாடு

சென்னை மக்களின் குறைத்தீர்க்கும் நம்ம சென்னை செயலி

சென்னை மக்களின் குறைத்தீர்க்கும் நம்ம சென்னை செயலி

webteam

சென்னை மாநகராட்சி மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய  "நம்ம சென்னை" என்ற  புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமாக நம் சுற்றுப்புறத்தில் இருக்கும் குறைகளை பதிவு செய்ய மாநகராட்சியின் இலவச எண் (1913) டையல் செய்தோ அல்லது புகாரை மனுவாக எழுதி அனுப்பியோதான் தெரிவிக்க வேண்டும். ஆனால் இனி சுற்றுப்புறத்தில் குப்பை இருந்தாலோ, கொசுத்தொல்லை, சாக்கடை நீர் தேங்கினாலோ மக்கள் தங்கள் குறைகளை உடனடியாக பதிவு செய்ய சென்னை மாநகராட்சி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. "நம்ம சென்னை" என பெயரிட்டுள்ள இந்தச் செயலி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போதைய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள இச்செயலியில் நொடி பொழுதில் புகாரை பதிவு செய்யலாம். ஆண்ட்ராய்ட் தளத்தில் மட்டும்  இயங்கக் கூடிய இந்தச் செயலிலையை ப்ளே ஸ்டோர் போய் பதிவிறக்கம் செய்து, பெயர், தொலைபேசி எண், ஆதார் எண், வசிப்பிடம் போன்ற அடிப்படை தகவல்களை கொடுத்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதில் புகைப்படத்துடன், எழுதி புகாரை பதிவு செய்யலாம். உதாரணமாக தெரு விளக்கு எரியாமல் இருப்பதில் இருந்து, குப்பை அல்லாமல் அசுத்தமாக இருப்பது வரை 12 பிரிவுகளில் அனைத்து புகார்களையும் பதிவு செய்யலாம். பதிவு செய்த புகார் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது, மேலும் புகாரின் நிலை குறித்து அறியும் வசதியும் இதில் உள்ளது.