death
death pt desk
தமிழ்நாடு

நாமக்கல்: குழந்தைகளை தவிக்கவிட்டு லாரி அதிபரும் அவரது மனைவியும் எடுத்த விபரீத முடிவு

webteam

நாமக்கல் அடுத்த நலலிபாளையம் அருகே உள்ள சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவருக்கு திருமணமாகி மதுமிதா (28) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். லாரி அதிபரான முருகேசன், நாமக்கல்லில் லாரி பட்டறையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.

death

இந்த நிலையில், நேற்று மதியம் குழந்தைகளின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் முருகேசனின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகேசனும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து நள்ளிபாளையம் காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இருவரும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றர்.

Death

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.