தமிழ்நாடு

நாமக்கல் தம்பதி கொலைக்கு காரணம் என்ன?

webteam

நாமக்கல்லில் இளம் தம்பதி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேட்டுத் தெருவைச் சேர்ந்த விமல்ராஜையும் அவரது மனைவி அனிதாவையும் 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்தது. விமல்ராஜும் அனிதாவும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் அதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அனிதாவின் சகோதரர் அருணுக்கும் அவரது நண்பர் மனைவிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததே இதற்கு காரணம் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.


 
கோவையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் அருணுக்கும் அவரது நண்பர் நிக்கல்சனின் மனைவி ஷோபனாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் ஷோபனாவை அருண் அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமல்ராஜ் மற்றும் அனிதா குடும்பத்தினரிடம் நிக்கல்சன் முறையிட்டும் அவர்கள் அருணை தட்டிக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நிக்கல்சன், விமல்ராஜ் மற்றும் அவரது மனைவி அருணாவை கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.