தமிழ்நாடு

பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்: ராக்கெட் லான்சரா போலீசார் விசாரணை

webteam

திருவள்ளூர் அருகே 100 நாள் பணியின் போது பூமியில் புதைந்து கிடந்த பழங்கால ராக்கெட் லான்சர் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாளந்தூர் பகுதியில் 100 நாள் பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லான்சர் போன்ற பொருள் ஒன்று பூமிக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.