கணவன் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து மனைவியை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன்(27). இவருக்கும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பிரியா(25) என்பவருக்கும் கடந்த 10 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரவிந்திரனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கணவன் ரவீந்திரன் வீட்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். ரவீந்திரன் உயிரிழப்புக்கு காரணம் அவரது மனைவி பிரியா என்று உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து தற்போது ரவீந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் உறவினர் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். பிரியாவை கைது செய்ய கோரி உறவினர்கள் மயிலாடுதுறை மருத்துவமனை முட்டையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பட்டுள்ளது.