தமிழ்நாடு

பள்ளி மாணவி மர்ம மரணம்: கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை

kaleelrahman

வீட்டில் தனியாக இருந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள பத்திரகாளியம்மன் லே-அவுட்டில் வசித்து வரும் சண்முகம். இவரது மகள் கர்த்திகாராஜ் உடுமலையில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாணவியின் தாயார் பணி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் பின்புற வாசலருகே கர்த்திகாராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார் இதனையடுத்து அந்த மாணவியின் தாயார் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மாணவியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து உடுமலை டிஎஸ்பி தேன்மொழி வேல் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் மற்றும் மேற்கு மண்டல ஐஜி முத்துச்சாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.