தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு வழக்கு நவ.6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

webteam

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சொந்தமான இடத்தில் வாகன நிறுத்துமிடம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் தேசிய தென்மண்டல தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.நம்பியார், பி.எஸ்.ராவ் அடங்கிய முதல் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இறுதி விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இறுதிகட்ட விசாரணையை தற்போது தொடங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கை வரும் நவம்பர் 6ஆம் தேதிக்கும் நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.