எம்.பி. திருச்சி சிவா
எம்.பி. திருச்சி சிவா  புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் பணி எளிதாகும்” - எம்.பி. திருச்சி சிவா

webteam

புதுச்சேரி மாநில திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. வில்லியனூர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி. திருச்சி சிவா, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் எம்.பி. திருச்சி சிவா

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. திருச்சி சிவா, அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேசினார். அவர் பேசுகையில், “கடந்த சில காலமாகவே அதிகார மையங்களை வைத்து பாஜக அச்சுறுத்தி வந்தது. தற்போது அந்தபோக்கு, தமிழகத்திலும் ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனையால் திமுகவிற்கு பின்னடைவு கிடையாது.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் பணி எளிதாகும். அதன் மூலம் திமுகவுக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.

அமைச்சர் பொன்முடி

மத்திய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களையும், காரணங்களையும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இது குறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை என்று முதலமைச்சர் சொல்லிவிட்டு சென்றிப்பது தான் எங்களுடைய நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.