தமிழ்நாடு

காரைக்குடி: பாதாளச்சாக்கடை குழிகளால் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

Sinekadhara

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் பல மாதங்களாகியும் மூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.110 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது பாதாளச் சாக்கடை பணி. கழிவுநீர் குழாய் அமைக்க முக்கிய சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டதால் போக்குவரத்து சிரமம் மட்டுமன்றி விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.