தமிழ்நாடு

மழையை விஞ்சிய குரங்கின் தாய்ப்பாசம் - நெகிழ்ச்சி காட்சி

ஜா. ஜாக்சன் சிங்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் மழையில் நனைந்துவிடாமல் தனது குட்டியை தாய்க்குரங்கு நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் காட்சி
இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், முதுமலையில் உள்ள வனத்துறை அலுவலக கட்டடத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு ஒன்று, தான் நனைந்தாலும் தனது குட்டியை மழையில் நனையவிடாமல் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது. இக்காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.