தமிழ்நாடு

படிக்கவில்லை என கண்டித்த தாய்: 6 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

சரியாக படிக்கவில்லை என தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி  தற்கொலை செய்து கொண்டார்.

திருவேற்காடு அடுத்த சின்ன கோலடி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் ஜனனி (11). இவர், அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படிக்காமல் வீட்டில் வரைபடம் வரைந்து கொண்டிருந்ததை அவரது தாய் சரண்யா திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஜனனி தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றின்று பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தாய் கண்டித்ததால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.