தமிழ்நாடு

தூத்துக்குடி: சோளப் பயிர்களை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலி!

Sinekadhara

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மழையினால் சேதமடைந்த சோளப்பயிர்களை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன. உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவரும் சில ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்குமென ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.