தமிழ்நாடு

ஓபிஎஸ் இளைய மகன் போட்டியிட 100க்கும் மேற்பட்டோர் விருப்பமனு..!

Veeramani

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பெயரில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நூற்றுக்கணக்கானோர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் பெயரில், கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 100க்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்தில் மூத்தமகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.