தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்

Veeramani

சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால், புகாரளிக்கும் வாட்ஸப் எண், மின்னஞ்சல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சலிலும், 9445394453 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகாரளிக்கலாம். தேர்தல் செலவினங்களை கண்காணிக்க வருமான வரித்துறை உதவியை நாடியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.