தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

kaleelrahman

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வ மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 26ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.