தமிழ்நாடு

துடைப்பத்தால் பெருக்கி 'என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ

Sinekadhara

பூவிருந்தவல்லி நகராட்சியில் 'என் குப்பை என் பொறுப்பு’ திட்டத்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தால் பெருக்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பூவிருந்தவல்லி நகராட்சியில் 'என் குப்பை என் பொறுப்பு’ திட்ட துவக்க விழா நடைபெற்றது. நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் மட்கும் குப்பை, மட்கா குப்பை என தனியாக குப்பைகள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தபட்டது. இதில் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி கலந்துகொண்டு நகராட்சி துப்புரவு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, தலைவர்கள், கவுன்சிலர்கள் என உள்ளாட்சி பிரதிநிதியுடன் பேருந்து நிலையத்தை துடைப்பத்தால் பெருக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து உரக் குடில்களை ஆய்வுசெய்த எம்எல்ஏ பொதுமக்களுக்கு இயற்கை உரங்களை வழங்கினார்.