தமிழ்நாடு

இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி ஒற்றுமையைக் குலைக்காதீர்: மு.க.ஸ்டாலின்

Rasus

இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி ஒற்றுமையைக் குலைக்காதீர் என மத்திய அரசுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒற்‌றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தி-சமஸ்கிருத மொழிகளை திணிக்க மத்திய பாஜக அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவனையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்