தமிழ்நாடு

கொடநாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?: ஸ்டாலின் கேள்வி

கொடநாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?: ஸ்டாலின் கேள்வி

webteam

முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்க பயன்படுத்திய கொடநாடு வீடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் மர்மம் இருப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொடநாட்டில் ஜெயலலிதா பயன்படுத்திய வீட்டின் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்தே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்று கூறினார். மேலும், அந்த வீடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதில் மர்மம் இருப்பதாக தெரிவித்த ஸ்டாலின், காவலாளி கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.