தமிழ்நாடு

பெண்ணடிமைத்தனம் முடை நாற்றம் வீசியபோது புரட்சிக்கனலாய் வாழ்ந்தவர் முத்துலட்சுமி : ஸ்டாலின்

PT WEB

பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ, பாலினச் சமத்துவமிக்க சமுதாயத்தை படைப்போம் என மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் இதனை பதிவிட்டுள்ளார். பிற்போக்குத்தனங்களும், பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்தவர் என முத்துலட்சுமி அம்மையாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.