தமிழ்நாடு

புதுக்கோட்டை: அரசு கிடங்கில் குவிந்து கிடக்கும் மிக்சி, கிரைண்டர்கள்

கலிலுல்லா

புதுக்கோட்டை அருகேயுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்பாடற்ற நிலையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கப்பட்டன. இந்த நிலையில் புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டை அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்கள் யாவும் மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்காமல் பயனற்று கிடப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் கேட்ட போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்தது போக மீதமுள்ளவை சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் இது குறித்து அரசுக்கு முறையாக தகவல்கள் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.