தமிழ்நாடு

ரூ.218.22 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

Sinekadhara

ரூ.218.22 கோடியில் 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையில் 394 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார். இந்த 4 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதன்மூலம் சுமார் 7000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் நீலகிரியில் 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் ரூ.50.06 கோடியில் நவீனமயமாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நீட்ஸ் திட்டத்தில் தொழில்முனைவோர் மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.