தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: சாலையை புனரமைக்க அமைச்சர் உறுதி

webteam

ராமநாதபுரம் மாவட்டம் கோழிகுளம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் மோசமான நிலைகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, சாலையை புனரமைக்க அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கோழிகுளம் கிராம சாலை சீரமைப்புக்காக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான மணிகண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேய்க்குளம் ஊராட்சிக்குட்பட்ட கோழிகுளம் கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்திருப்பது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. சேதமடைந்த சாலையை காரணம் காட்டி, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அந்த கிராமத்திற்கு செல்லாததால், மக்கள் படும் துயரம் குறித்தும் நேற்று புதியதலைமுறையில் செய்திவெளியானது. அதனையடுத்து, சம்பந்தப்பட்ட சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அந்த பணி தொடங்குவதற்கு முன்பே, சாலை தற்காலிகமாக புனரமைப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.