தமிழ்நாடு

கோவில் கச்சேரியில் எம்.ஜி.ஆர் பாடல் பாடி அசத்திய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

sharpana

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திருவிழாவின் கச்சேரி ஒன்றில் பாடியது பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

அதிமுகவில் அறிவானவர் புள்ளியல் விவரங்களை அடுக்குபவர் என்று பெயர்பெற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாடும் திறமையும் கொண்டவர் என்று தற்போது பெயரெடுத்துள்ளார்.

கடும்பாடி அம்மன் சின்னம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற கச்சேரியில் கலந்துகொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸாக ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலைப் பாடி மக்களை ரசிக்க வைத்துள்ளார்.

பாடகர்களுக்கே உரிய ராகத்தோடு அவரின் குரல் ரசித்து தாளம் போட வைக்கிறது என்பதை மேடையில் உள்ளவர்களின் ரியாக்‌ஷன்களே சாட்சி. இந்த வீடியோவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.