தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

webteam

தமிழ்நாட்டில் 380 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் புதிய மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின் செய்தியாளர்கள சந்தித்த அவர், அரசு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சலுக்கு 17 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.