தமிழ்நாடு

பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய்!

webteam

நாமக்கல் அருகே பூனைக்குட்டி ஒன்றுக்கு பாலூட்டிய நாயை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு செல்கின்றனர்.     

ஒரு உயிரினம் இன்னொரு உயிரினத்தின் மீது அன்புக் காட்டலாம் ஆனால் அதற்கு தாயாக மாறிவிட முடியாது. ஆனால் அப்படியொரு விநோதம் நாமக்கல் அருகே வளையப்பட்டி அடுத்த ஆண்டாபுரத்தில் நடந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ஜான் என்பவர் பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 6 குட்டிகளை ஈன்றது. 

இந்நிலையில் ஜான், பூனைக்குட்டி ஒன்றையும் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். துவக்கத்தில் இருந்து பெண் நாயிடம் விளையாடி வந்த அந்தப் பூனைக்குட்டி நாயின் மடியில் தினசரி பாலைக் குடித்து வருகிறது. தான் பெற்றெடுக்காத வேறு இனத்தைச் சேர்ந்த பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாயை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு செல்கின்றனர்.