தமிழ்நாடு

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பு... திருப்போரூர் கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய தடை !

jagadeesh

திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயில் ஆகியவற்றிற்கு சொந்தமான ரூ.60 ஆயிரம் கோடி சொத்துக்களை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் தாக்கல் செய்த வழக்கில் திருப்போரூர் சார் பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தக் கோயில்களின் சொத்துக்களை அபகரிக்க 20 குழுக்கள் கண்கொத்தி பாம்பாக காத்திருப்பதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.