தமிழ்நாடு

மாநகர பேருந்து மீது மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் விழுந்து விபத்து - 5 பேர் காயம்

PT

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன், மாநகர பேருந்து மேல் விழுந்த விபத்தில் 5 பேருந்து ஊழியர்கள் காயமடைந்தனர்.

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை குன்றத்தூர் பகுதியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்ற மாநகர பேருந்து மீது, மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. ராட்சத தூண் அமைப்பதற்காக கட்டப்பட்ட கம்பிகளை கிரேன் மூலம் தூக்கியபோது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது கிரேன் கவிழ்ந்தது.

இதில், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொருங்கியது. பேருந்தில் பணிக்குச் சென்ற ஓட்டுநர்கள் அய்யாதுரை, பூபாலன், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் மற்றும் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.