தமிழ்நாடு

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

Sinekadhara

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் நாளைவரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற 7ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.