தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப்பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை

Sinekadhara

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9 , 10 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்திருக்கிறது. மேலும், நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது. மேலும், வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தி இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானபின், வட கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.