தமிழ்நாடு

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு

PT WEB

மறைந்த முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக்குறைவால் கருணாநிதி காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 50 ஆண்டு திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

talin 

சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.23 ஏக்கரில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் எனவும், கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.